கோயம்புத்தூர் கரும்புக்கடை பாத்திமா நகர் வழியாகச் செல்லும் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவுகளால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கோவையில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்துள்ளது. மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் நொய்யல் ராஜவாய்க்கால் மற்றும் ஆற்றுப்பாலம் வழியாகச் செல்லும் ஓடைகள் மூலம் வெள்ளலூர், சிங்காநல்லூர், சூலூர் வழியாகத் திருப்பூர் செல்கிறது. இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தில் இருந்து கரும்பு கடை வழியாகச் செல்லும் நீர்வழிப் பாதையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் செல்வதாலும், ஓடை தூர்வாரப்படாததாலும் கரும்புக்கடை பாத்திமா நகர் சுற்று வட்டார பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Read More