கோவை ரயில் நிலையம் வந்த அரசுப் பேருந்து ஜப்தி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அரசுப் பேருந்து பணிமனையில், ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் துறைசாமி (57). இவர் கடந்த 2021 மே.5 ஆம் தேதி ஈரோடு – உடுமலைபேட்டை சாலையில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, மது போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் பேருந்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த நபர் இரண்டு நாட்கள் சிகிச்சையிலிருந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் பேருந்தை இயக்கிய துறைசாமியை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த இடை நீக்கம் காலத்தில் பாதி ஊழியம் வழங்கியதோடு பணிக் கொடைகளை வழங்காமல் நிறுத்தப்பட்டது.
கடந்த 2022 ஜன.7 துறைசாமி கோவை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் நிறுத்தி வைத்த ஊழியம் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதையடுத்து மார்ச் மாதம் முதல் பணி வழங்கவும், நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் பணிக்கொடையென ரூ.32,157 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் தொடர்ந்து தொழிலாளர் நல நீதிமன்றத்தை அரசு போக்குவரத்து கழகம் செயல்படுத்தாதால், மீண்டும் கடந்த மார்ச் 2023 ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த நவ10 ஆம் தேதி அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கோவை மாநகரில் இயக்கப்படும் எண்.11 அரசுப் பேருந்து கோவை ரயில் நிலையத்திற்கு வந்த போது அதனை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினார். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது