கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (25) என்ற நபரைக் கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23) என்பவர்மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நாகப்பன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளி நாகப்பன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான நாகப்பன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்கான ஆணையைச் சிறையில் அவரிடம் வழங்கிய காவல் துறையினர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளை வித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாகச் செயல்பட்டாலோ அவர்கள்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!