கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணிகள் காரணமாக கோயம்புத்தூர் ரயில்கள் ரத்து!

போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் கண்ணூா் – கோயம்புத்தூர் விரைவு ரயில் (எண்: 16607) கண்ணூா் – பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் பாலக்காடு – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படாது.

இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல்1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் -கோயம்புத்தூர் இடையே மட்டும் இயக்கப்படும். கோவை – போத்தனூா் இடையே இயக்கப்படாது.

கோயம்புத்தூரில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கோயம்புத்தூர் – மதுரை விரைவு ரயில் (எண்: 16721) பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு மதுரைக்குப் புறப்படும். இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் கோயம்புத்தூர் – பொள்ளாச்சி இடையே இயக்கப்படாது.

போத்தனூரில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல் 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) கோவையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்குச் செல்லும்.

இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் போத்தனூா் – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!