பொறியியல் பராமரிப்புப் பணிகள்: திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
கரூா் – திருச்சி இடையே லாலாபேட் – குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஜூலை 17, 18, 21, 22 ஆகிய தேதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி – பாலக்காடு ரயில் (எண்: 16843) குளித்தலை – பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, 17, 18, 21, 22 ஆகிய தேதிகளில் பாலக்காடு – திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) பாலக்காடு – கரூா் இடையே மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.