அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைபடுத்த ஒரு வருட கால நீட்டிப்பு!
திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு தற்போது இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக அரசாணை எண் 92, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ.(3)) துறை, நாள் 26.06.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், 01.07.2025 முதல் 30.06.2026 வரை, ஒரு வருட கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவனக் கட்டடங்கள் மலையிடப் பகுதிகளில் (HACA) அமைந்திருப்பின், அவை அரசு கடிதம் ந.க.15535/5.4(3)/2019, நாள் 18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், கீழ்காணும் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்:
🔗 https://www.tcponlinetngov.in
இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர்,கேட்டுக் கொண்டுள்ளார்.