Top Storiesஇந்தியாஉலகம்

அகமதாபாத் விமான விபத்து – 241 பயணிகள் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் 171 என்ற போயிங் விமானம், வியாழக்கிழமை மதியம் சரியாக 1.38 மணியளவில், லண்டன் புறப்பட்டது. விமானத்தை கேப்டன் சுமித் சபர்வால், துணை கேப்டன் கிளைவ் குந்தர் இயக்கினர்.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தார். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன்ந்நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டையும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர். விமானம் சரியாக மதியம் 1.38 மணியளவில் கிளம்பிய நிலையில், 5 நிமிடங்களில் விமான கேப்டன் சுமித்  சபர்வால், மிகவும் ஆபத்தான சூழல் ஏற்பட்டதாகக் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தியை அனுப்புகிறார். 

ஆனால் அதற்கு விமானம் அகமதாபாத் மேகனிநகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியின் மேற்கூரையின் மேல் விழுந்தது. இதில் பலத்த சத்தத்துடன் விமானம்  வெடித்துச் சிதறியது. நொடிப்பொழுதில் கரும்புகை சூழ்ந்ததால் என்ன என்று புரியாமல் திகைத்த மக்களுக்குச் சற்று நேரத்தில் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளதை உணர்ந்தனர். 

தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர், வேகவேகமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து வரிசை கட்டி ஆம்புலென்ஸ்களும் வரத்துவங்கியது. விமான பயணிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் விடுதியில் சிக்கிய மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் மீட்புக் குழுவினருடன் பொதுமக்களும் களத்தில் இறங்கினர்.

ஆனால் பார்க்கும் இடமெல்லாம் கருகிய நிலையில் சடலங்களாகக் காணப்பட்டது காண்போரைக் கலங்கடித்தது. இருப்பினும் உயிருக்குப்
 போராடியவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த கோர விபத்தில் லண்டனின் உள்ள தனது மகளை காணச் சென்ற குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணித்த ரமேஷ் விஸ்வகுமார் என்ற பயணி மட்டுமே அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

விமானம் வெடித்த நிலையில் அடுத்த நொடியே அவசரக் கால கதவைத் திறந்து உயிர் பிழைத்துள்ளார். சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் கள ஆய்வு மேற்கொள்ளப் பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெற்ற இந்த கோரச் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். அதே போல விமான விபத்து தொடர்பாக உடனடியாக மத்திய அரசு விசாரணையைத் துவங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!