கோயம்புத்தூர்செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு!

மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி, சமூக மறுவாழ்வு பணியாளா்கள் மற்றும் சமூக வழி நடத்துநா் மூலம் ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகளை கணக்கெடுக்க வருபவா்களுக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ளோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை இல்லாதவா்கள் என அனைவரும் தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 94999 33471, 86674 80186 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!