கே.ஜி.சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – ரூ. 2.13 பறிமுதல்
கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி மற்றும் கோபாலபுரம் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் காலை 5 முதல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோயம்புத்தூர் – கேரளா எல்லையான கே.ஜி.சாவடி ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் உள்ள ஸ்டோர் ரூமில் இருந்த பிர்ண்டர் பெட்டியில் ரூ.1 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கிருந்த மேஜைகளில் ரூ.17 ஆயிரம், மற்றும் மோட்டர் வாகன ஆய்வாளர் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனைப் பறிமுதல் செய்த போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயசந்திரன், லோகநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர்.