ஈச்சர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி!
கோயம்புத்தூர் க.க.சாவடி அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எரிவாயு ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சுனில் (31). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலென்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற சுனில் இன்று காலை 5 மணியளவில் வேலைக்குச் செல்ல வேண்டி தனது இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது க.க.சாவடி அருகே சர்வீஸ் சாலையில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் முன்னாள் எரிவாயு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுனில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக க.க.சாவடி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.