ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்..!
கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், பாரதி செல்வி தம்பதிகள். சுந்தரராஜன் தனியார் நிறுவன காவலாளி. இவர்களுக்கு இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா.
2025 -ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தலா 474 என ஒரே மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். இந்த இரட்டையர்கள், ஒரே அளவிலான முயற்சி மற்றும் கல்வி உறுதிப்பாட்டின் மூலம் ஒரே மதிப்பெண்களைப் பெற்று உள்ளனர்.
தமிழில் 95 மற்றும் 96, ஆங்கிலத்தில் 97 மற்றும் 98, கணிதத்தில் இருவரும் 94, அறிவியலில் 89 மற்றும் 92, சமூக அறிவியலில் 95 மற்றும் 98 என மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். பள்ளி ஆசிரியர்களும், உறவினர்கள் அனைவரும் இச்சகோதரிகளின் வெற்றிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.