கோயம்புத்தூர்செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது – 34 சவரன் நகை பறிமுதல்

கோயம்புத்தூர் பேரூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடி வந்த இளைஞரைப் பேரூர் காவல்துறை கைது செய்தனர்.

கடந்த ஏப் மாதம், கோயம்புத்தூர் பேரூரைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள், மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பேரூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் சுண்டக்காமுத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த ராமசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (23). என்பவரை காவல்துறை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்பு ராடு, மற்றும் பல்வேறு பகுதிகளில் திருடிய 34 சவரன் தங்க நகைகள், வெளிப்பொருட்கள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், அவர் மீது ஏற்கனவே 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!