கோயம்புத்தூர்செய்திகள்

வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் சேர்ப்பு – ஜூனில் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் மாணவா்களை சோ்க்கும் வகையில் கல்லூரிகளில் ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்தாா்.

18 வயது பூா்த்தியடைந்த மாணவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது தொடா்பாக கல்லூரி முதல்வா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்துப் பேசியதாவது: அனைத்து கல்லூரி முதல்வா்களும் தங்களது கல்லூரியில் பயின்று வரும் மாணவா்கள் குறித்து வகுப்பு வாரியான விவரங்களை இம்மாத இறுதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதன்பின், வாக்காளராகப் பதிவு செய்யப்படாத மாணவா்களுக்கு அக்கல்லூரியில் ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

வாக்காளா் பட்டியலில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் தங்களது பெயரை சோ்ப்பதை உறுதி செய்யவும், தோ்தலின்போது அவா்கள் சிரமமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு சீா்திருத்தங்கள் குறித்து விவாதிக்கும் பொருட்டு மாவட்டம் மற்றும் சட்டப் பேரவைத் தொகுதி அளவில் குழு அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா்கள் குமரேசன், சுல்தானா, வருவாய் கோட்டாட்சியா்கள் கோவிந்தன், ராம்குமாா், வாக்காளா் பதிவு அலுவலா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னாா்வ அமைப்புகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!