கோவை: மத்தியச் சிறையில் +2 தேர்வு எழுதிய சிறைவாசிகள் தேர்ச்சி
கோவை மத்தியச் சிறையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் சிறைவாசிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, பாஸ்கர் என்பவர் 448 மதிப்பெண்கள் பெற்று சிறைவாசிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து ஹரி கிருஷ்ணன் 430 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், துளசி கோவிந்தராஜன் 429 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறைத்துறை அதிகாரிகளும், கல்வியாளர்களும் சிறைவாசிகளின் இந்த முயற்சியையும், வெற்றியையும் பாராட்டியுள்ளனர்.
தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வெழுதியது மட்டுமல்லாமல், நல்ல மதிப்பெண்களும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.