Techதமிழ்நாடு

கொடிசியாவில் வரும் 14 ஆம் தேதி ”சப்கான்” கண்காட்சி!

தொழில் துறைக்குத் தேவையான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக ”சப்கான்” கண்காட்சி வருகின்ற மே 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது..

கோவை, கொடிசியா வளாகத்தில் தொழில் துறைக்குத் தேவையான உற்பத்தி பொருட்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்யும் நோக்கில் பொதுத்துறை நிறுவனங்கள்,ராணுவத் தளவாட மற்றும் பெரும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உற்பத்தி பொருட்களைக் கண்காட்சி ”சப்கான்” 2025 என்ற தலைப்பில் வருகின்ற14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 250-க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 10,000-க்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதில் தமிழ்நாடு,டெல்லி கேரளா,மகாராஷ்டிரா,பாண்டிச்சேரி, டெல்லி,ஹரியானா,குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

கோயம்புத்தூர் பகுதியில் உள்ள 2 லட்சம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய தொழிற்சாலைகளுடன் ஒருங்கிணைப்பது இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்று ”சப்கான்” தலைவர் சஞ்சீவி குமார் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!