அங்கன்வாடி மையம் அமைப்பது குறித்து மேயர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.!
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (06.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், மாண்புமிகு மேயர் அவர்கள், தெற்கு மண்டலம், வார்டு எண்.79க்குட்பட்ட செல்வபுரம். முத்துசாமி நகர் மற்றும் கல்லாமேடு, பள்ளிவாசல் வீதி. மாதா கோயில் வீதி ஆகிய பகுதியிலுள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையங்களை புதுப்பித்து கட்டுவது தொடர்பாகவும், வார்டு எண்.95-க்குட்பட்ட போத்தனூர், டெக்ஸ்சிட்டி பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாகவும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல குழுத்தலைவர் ரெ.தனலட்சுமி மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.