அரசியல்தமிழ்நாடு

இந்தியில் தமிழ்நாடு வானிலை அறிவிப்பிற்கு கண்டனம் – எம்.பி. சு. வெங்கடேசன்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு இந்தியிலும் வழங்கப்படுவதற்கு மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

“தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை ஹிந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத மத்திய அரசு, பேரிடர் முன்னறிவிப்பில் ஹிந்தியைத் திணிக்கிறது.

பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசியல் கட்சித் தலைவர் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!