Top Storiesகோயம்புத்தூர்

ரேபிஸ் பாதிப்பால் இளைஞர் மூர்க்கத்தனமாகக் கண்ணாடியை உடைத்து தற்கொலை!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு நாய்க் கடி சிகிச்சைக்கு வந்த வட மாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (35). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரைத் தெரு நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியாகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் உள்ள வெறிநாய் கடி தனிப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். அப்போது மதியம் 2.30 மணியளவில் திடீரென ராம்சந்தர் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு திடீரென சத்தம் போட்டவாறு அறைக்கும் அங்கும், இங்கும் நடந்துள்ளார். பின்னர் அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய் கடிக்குச் சிகிச்சைக்கு வந்த வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!