மருதமலை கோயில் உண்டல் திறப்பு – 43.100 கிராம் தங்கம், ரூ. 84.48 லட்சம் ரொக்கம் பக்தர்கள் காணிக்கை
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.84.48 லட்சம் ரொக்கம், 43.100 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி முருகனின் ஏழாம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டல் திறப்பு நிகழ்வுக் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 6 மணியளவில் உண்டியல் எண்ணும் பணிகள் நிறைவடைந்தது. இதில் நிரந்தர உண்டியலிலிருந்து ரூ.80.02 லட்சம், கோசாலை உண்டியல் ரூ.3.16 லட்சம், திருப்பணி உண்டியல் ரூ.1.29 லட்சம் என மொத்தம் ரூ.84.48 லட்சம் மற்றும் 43.100 கிராம் தங்கம், 6.811 கிலோ வெள்ளி, 18.175 கிலோ பித்தளை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்ததது தெரியவந்தது.
மேலும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.