கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஓணம் பண்டிகை முன்னிட்டு சென்னை – கண்ணூா் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் – பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை – கண்ணூா் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (எண்: 06009) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கண்ணூா் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 29) இரவு 9.30 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூா் – பெங்களூரு விரைவு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு 7 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூரு – கண்ணூா் விரைவு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!