ஹைதராபாத் – கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு!
ஹைதராபாத் – கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம்வரை நீட்டிக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகளின் வசதிக்காக தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் – கேரள மாநிலம் கொல்லம் இடையே கடந்த சில மாதங்களாக வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்துடன் இந்த ரயில் சேவை முடிவடைய உள்ள நிலையில், அக்டோபா் 13- ஆம் தேதிவரை இதன் சேவை நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, ஹைதராபாத்திலிருந்து ஆகஸ்ட் 16 முதல் அக்டோபா் 11 வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் – கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07193), திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்குக் கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கொல்லத்திலிருந்து ஆகஸ்ட் 18 முதல் அக்டோபா் 13ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் இரவு 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் -ஹைதராபாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, சாஸ்தன் கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, பாப்ட்லா, தெனாலி, குண்டூா், செகந்தராபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.