கோவையில் நடைபெற்ற சியால் கார் பந்தயத்தின் இரண்டாவது தகுதி சுற்று – செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்த கார்கள்
கோவையில் விஷன் 4 மோட்டார் ஸ்போர்ட்ஸ் சொல்யூஷன் வழங்கும் சியால் எனும் தென்னிந்தியன் ஆட்டோக்ராஸ் லீக்கின் இரண்டாவது தகுதி சுற்று , மலுமிச்சம்பட்டி பகுதியில் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட பிரத்யேக டிராக்கில் நடைபெற்றது.
ஓபன், அமெச்சூர் மற்றும் லேடீஸ் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாடு முழுவதும் இருந்து பெண் ஓட்டுனர்கள் உட்பட 19 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
இதில் ஓபன் பிரிவில் அஷ்வின் முதல் இடத்தையும், அமெச்சூர் பிரிவில் 16 வயதான விஹான் முதல் இடத்தையும் பிடித்துக் கவனம் ஈர்த்தனர். அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற பெண்கள் பிரிவில் பெருந்துறையை சேர்ந்த சோனாக்ஷி கடினமான செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்து முதல் இடம் பிடித்து அசத்தினார்.
பந்தயத்தில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்கள் தங்களது தைரியம், திறமை, மற்றும் சாய்ந்த நிலத்தில் வாகனத்தைக் கட்டுப்பாடாக அதே சமயத்தில் வேகமாக இயக்கியதை, பார்வையாளர்கள் புதிய அனுபவத்துடன் கண்டு வியந்தனர்.