பெங்களூர் – திருவனந்தபுரம் இடையே சிரப்பு ரயில் இயக்கம்!
பெங்களூரில் இருந்து கேரள திருவனந்தபுரத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் பெங்களூரில் இருந்து இரவு 7.25 மணிக்குப் புறப்படும் பெங்களூரு- திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06523) மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பா் 16-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் – பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06524) மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, வா்கலா, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கன்னூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.