கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை குற்றாலம் அருவி திறப்பு!

கோவை குற்றாலம் அருவி திறப்பு மதுக்கரை, ஜூலை.30: கோவை குற்றாலம் அருவியில் நீர் வரத்து சீரானதால் இன்று முதல் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் வன வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்த தொடர் மழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகக் கடந்த 23ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

மேலும் பொதுமக்கள் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நீர்வரத்து சீரானதால் இன்று முதல் மீண்டும் கோவை குற்றாலம் அருவி திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் கோவை குற்றாலம் அருவி திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!