கோயம்புத்தூர்தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை..!

கோவையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட,  ரிஸ்வான் என்ற இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கோவை உக்கடம் அல் அமீன் காலனியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (31). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசார் ரிஸ்வான் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ரிஸ்வான் பிணையில் வெளியே வந்து சுற்றித்திரிந்தார்.  இந்த நிலையில் இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 வாரத்திற்கு முன் போக்ஸோ நீதிமன்றத்தில்  நடைபெற்றது. 

*தண்டனை பெற்ற ரிஸ்வான், ஒவ்வொரு முறையும் போலீசார் பிடிக்கச் சென்றபோது பிளேடால் அறுத்துக் கொள்வேன் என மிரட்டிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது*

அப்போது விசாரணைக்கு ஆஜரான ரிஸ்வான் தனக்கு தண்டனை கொடுக்கக் கூடாது, தன்னை கைது செய்யக் கூடாது எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மிரட்டிச் சுமார் 4 மணி நேரம் தகராறில் ஈடுபட்டார். 

இதையடுத்து போலீசார் அவரின் உயிர் பாதுகாப்பு கருதி விடுவித்த நிலையில், 3 நாட்கள் கழித்து அவரை மூன்று மணி நேரம் கண்காணித்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்துக் கைது செய்தனர்.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது இன்று வெளியானது. அதில் ரிஸ்வான் குற்றவாளி என்றும் போக்சோ வழக்கில் 7 ஆண்டுகள், கொலை மிரட்டல் வழக்கில் 5 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!