கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுநர் தற்கொலை முயற்சி!
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த ஓட்டுநர் ஒருவர் திடிரென உடலில் டீசல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆனைக்கட்டி வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கி வரும் அழகர் என்ற ஓட்டுநர், தனது மகளுக்குப் பாலியல் தொல்லையளித்து கொல்வேன் எனக் கூறி மிரட்டியதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த குடும்பத்தோடு வந்தார்.
அப்போது திடிரென முருகன் மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்குப் பணியில் இருந்த காவலர்கள் முருகனை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
மேலும் அவரை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் தனது மகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்வேன் என மிரட்டிய பேருந்து ஓட்டுநர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.