கோயம்புத்தூர்தமிழ்நாடு

திருச்சி சிவா எம்பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார்..!

திருச்சி சிவா எம்பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

அண்மையில் திமுக எம்.பி திருச்சி சிவா காமராசர் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் திமுக எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து யுவராஜ் கூறும்போது: திருச்சி சிவா கூறிய கருத்தை அவரது கருத்தாகப் பார்க்க முடியாது என்றும் திமுகவின் கருத்தாகவே பார்க்க முடியும்.

மேலும் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் காமராஜர் என்பவர் உணர்வு என்றும் அவர்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திருச்சி சிவா பேசிருக்கும் நிலையில கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அன்றைய தினமே விட்டுவிட வேண்டும் எனப் பேசுவது ஏற்புடையதல்ல எனக் கூறினார்.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரும் மக்களுக்கான பிரச்சினைகள்குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!