கோயம்புத்தூர்செய்திகள்

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 2014ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் நாகராஜ் (50) என்பவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் சுமார் 50 வயது பெண்ணைக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை இன்று (15.07.2025) முடிவு பெற்று குற்றவாளி நாகராஜ் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல் நிலைக் காவலர் நந்தகுமார் (Gr I 274) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!