பொறியியல் பணி காரணமாக கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!
கோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரையில் இருந்து ஜூலை 14, 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்குப் புறப்படும் மதுரை – கோயம்புத்தூர் விரைவு ரயில் (எண்: 16722) அன்றைய தினங்களில் மதுரை – பொள்ளாச்சி இடையே மட்டும் இயக்கப்படும்.
பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, கோயம்புத்தூரில் இருந்து ஜூலை 14,16,18 மற்றும் 20-ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் கோவை – கண்ணூா் விரைவு ரயில் (எண்: 16608) கோயம்புத்தூர் – பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும்.
பாலக்காடு – கண்ணூா் இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.