கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் கட்டிட தொழிலாளி கொலை – 2 பேர் கைது

கோவை ஈச்சனாரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார்  கைது செய்தனர். 

கோவை மதுக்கரை அருகே உள்ள போடிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33), கட்டிட தொழிலாளி,  இவர் கட்டுமான அலங்காரப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்  தனது நண்பர் ஜீவாபிரசாந்த் மற்றும் சிலருடன் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு வந்துள்ளனர்.

அப்போது  மலுமிச்சம்பட்டியில் உள்ள மது கூடத்தில் மது குடித்துள்ளனர் அப்போது ஜெயக்குமாருக்கும் அங்கு மது குடிக்க வந்த வெளி நபர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கலைந்து சென்றுவிட்டனர். 

பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் மீண்டும் மது குடிக்க வந்தபோது அங்கு ஏற்கனவே தகராறு செய்த இரண்டு பேர் இருந்துள்ளனர்.  அப்போது மீண்டும் கட்டிட தொழிலாளி  ஜெயக்குமாருடன் தகராறு ஏற்பட்டது. 

இதையடுத்து ஜெயக்குமாரும் அவருடைய நண்பரும் அங்கிருந்து சென்று தனியார் கல்லூரி அருகே உள்ள பேக்கரி ஒன்றில் நின்று கொண்டிருந்தனர்.  அப்போது ஜெயக்குமார் உட்பட இரண்டு பேரிடமும் ஏற்கனவே தகராறு செய்தவர்கள் காரில் பின் தொடர்ந்து வந்தனர்.

மேலும்  காரில் வந்த அவர்கள் மீண்டும் தகராறில் விடுபட்டதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயக்குமார் கழுத்தில் சாராமாரியாகக் குத்தினர்.

இதில் படுகாயமடைந்ந  ஜெயக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு  அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி  காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர், அதன் அடிப்படையில் ஜெயக்குமாரை கொலை செய்த ஆத்துப்பாலத்தை சேர்ந்த முகமது ஹாரூன் (32), மற்றும் உடந்தையாக இருந்த குறிச்சியை சேர்ந்த விக்கி என்கிற விக்ரமன் (24), ஆகிய இருவரை கைது செய்தனர்.

பின்னர் விசாரணைக்குப் பின்  அவர்களை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!