மக்களே.. கவனம் – கோவையில் நாளை எங்கெல்லாம் மின்வெட்டு…
கோவையில் நாளை (25-06-25) மயிலம்பட்டி, குனியமுத்தூர் மற்றும் அண்ணா பல்கலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தெரரிவிக்கப்படுகிறது.
மயிலம்பட்டி துணை மின் நிலையம் கீழ் வரும் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா ஒரு பகுதி மற்றும் கோல்டுவின்ஸ் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
குனியமுத்தூர் துணை மின் நிலையம் கீழ் வரும் குனியமுதூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்திராபுரம் ஒரு பகுதி, பி.கே.புதூர், கோவைபுதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுதூர் ஒரு பகுதி
அண்ணா பல்கலை துணை மின் நிலையம் கீழ் வரும் கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி காலனி, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், கோல்டன் நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ் அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மணம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.