வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று (18.10.2025) தேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம்,வாடு வக்குட்பட்ட விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
அதனைத் தொடர்ந்து, வார்டு எண்டுக்குட்பட்ட வீரியம்பாளையம் முதன் கருப்பராயன்பாளையம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதையும், எண்க்குட்பட்ட துளசி கார்டன் பகுதியிம் ரூ.281.00 இலட்சம் மதிப்பீட்டில் சித்ரா காளப்பட்டி சாலை ஆகிய இணைப்புச் சாலைகள் மற்றும் மெர்பாலம் கட்டுமானப் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வார்டு எண்.8-க்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை இரா.மோகன் நகர் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதையும் மற்றும் காளப்பட்டி பெரிய விநாயகர் குட்டையினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காளப்பட்டி குட்டையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்