கோயம்புத்தூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!
கோயம்புத்தூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 8 நாட்களாகப் பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62-ன் படியும் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்க வேண்டும், ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும்.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ரூபாய் 770 சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் 540 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. இது குறித்து தூய்மை ப்ணியாளர்கள் ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை, இதனால் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரியத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று 9வது நாளாகக் கோயம்புத்தூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன