கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், இன்று (17.06.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேயர், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 36 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி. மின்விளக்குகள். குடிநீர் வசதி, பாதாளச் சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 5 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 1 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 11 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 6 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 12 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 1 மனுக்களும் ஆகமொத்தம் 36 மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.