“Operation – Drug Free Coimbatore” 3 நாட்களில் கஞ்சா விற்ற 36 பேர் கைது – 10.150 கிலோ கஞ்சா பறிமுதல்.
“Operation – Drug Free Coimbatore” கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் கஞ்சா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டு 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகக் கடந்த 13 -ம் தேதி, முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் “Operation – Drug Free Coimbatore” என்ற பெயரில் ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஏற்கனவே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 927 நபர்களின் தகவல்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு திட்டம் வகுக்கப்பட்டது.
மொத்தம் மாவட்டம் முழுவதும் 89 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 300 காவல்துறை ஒரே நேரத்தில் அனைத்து உட்கோட்டத்திலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சோதனையிட்டனர்.
இந்நிலையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணை அடிப்படையில் கஞ்சா வைத்திருந்த 36 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட 36 நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.