தொடரும் தடை: 23ஆவது நாளாகக் கோவை குற்றால அருவி மூடல்
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்து வரும் மழையால் 23 ஆவது நாளாகக் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகளுக்குத் தடை தொடர்ந்து வருகிறது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கியது முதல் தொடர்ச்சி மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை நெருங்கியது.
மேலும் நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகமாகவே உள்ளது. இதனிடையே கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த மே.24 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டது.
மழை விட்டு விட்டு பெய்தாலும் அருவியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தொடர்ச்சியாகக் குற்றாலம் அருவி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்ததால் கோவை குற்றாலம் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக 23 ஆவது நாளாகக் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது