கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தூப்பாக்கி தோட்டா பறிமுதல்!

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று காலை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடைமைகள் சோதிக்கப்பட்டது.

அப்பொழுது அவர் கொண்டு வந்த பையில் 9mm வகை துப்பாக்கி தோட்டா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், பீளமேடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல அறக்கட்டளை அறங்காவலரின் மனைவி என்பதும், பெங்களூருக்குக் கிளம்பிய பொழுது துப்பாக்கி தோட்டா இருந்ததைக் கவனிக்காமல் எடுத்து வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!