கோயம்புத்தூர்செய்திகள்

பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர் ரயில் பகுதியாக ரத்து!

கோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக ஜூன் 15, 16-ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் – மதுரை ரயில் (எண்: 16721) பிற்பகல் 2.45 மணிக்கு போத்தனூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்லும். இதனால், கோயம்புத்தூர் – போத்தனூா் இடையே இந்த ரயில் இயக்கப்படாது.

கோயம்புத்தூரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு கண்ணூா் செல்லும் கோயம்புத்தூர் – கண்ணூா் ரயில் (எண்: 16608) போத்தனூரில் இருந்து பிற்பகல் 2.03 மணிக்கு கண்ணூா் புறப்பட்டு செல்லும். கோயம்புத்தூர் – போத்தனூா் இடையே இந்த ரயில் இயக்கப்படாது.

போத்தனூா்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) மாலை 3.45 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்டுச் செல்லும். இந்த ரயிலானது, போத்தனூா்- கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் கண்ணூா்- கோயம்புத்தூர் ரயில் (எண்: 16607), மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் மதுரை- கோயம்புத்தூர் ரயில் (எண்: 16722), ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூா்- கோயம்புத்தூர் இடையே இந்த ரயில் இயக்கப்படாது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் – கோயம்புத்தூர் இடையே மட்டும் இயக்கப்படும். கோயம்புத்தூர் – போத்தனூா் இடையே ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!