EconomyTop Storiesஇந்தியாஉலகம்

ஏர் இந்தியா போயிங் 787 டிரீம்லைனர் விமானம் விபத்து – காப்பீட்டுத் தொகை ரூ.1000.கோடியைத் தாண்டும் எனக் கணிப்பு.

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா போயிங் விமானத்தின் காப்பீட்டுத் தொகை ரூ.1000 கோடியைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகை நாட்டின் ஒட்டுமொத்த விமானங்களின் ஆண்டு காப்பீட்டுத் தொகையை விட அதிகம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் வியாழக்கிழமை கிளம்பிய “ஏர் இந்தியா போயிங் 787 டிரீம்லைனர் விமானம்”, கிளம்பிய 3 -வது நிமிடத்தில், அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த கோர விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்திய வரலாற்றில் மிகப் பெரிய விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. மேலும் மிகவும் விலை உயர்ந்த விமானமான “ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர்” விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, அதன் காப்பீட்டுத் தொகைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.

அதன் படி விபத்தில் சிக்கிய இவ்விமானத்தில் காப்பீட்டுத் தொகை ரூ.1000 கோடியைத் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய இந்த விமானம் கடந்த 2013 -ல் வாங்கப்பட்டது. இதன் வயதைக் கருத்தில் கொண்டாலும் காப்பீட்டில் தொகையில் பெரிய மாற்றம் இருக்காது.

விபத்தில் சிக்கிய இந்த விமானம் கடந்த 2021 – ல் தோராயமாக $115 மில்லியனுகு காப்பீடு செய்து, முழுமையான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளது. அதே போல ஏர் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு $20 பில்லியின் தொகையைக் காப்பீடாகக் கட்டுகிறது. மேலும் டாடா நிறுவனமும் உள்ளூர் காப்பீட்டு நிறுவனங்களிலும் காப்பீடு செய்துள்ளது.

அதே போல இறந்த பயணிகளின் மூன்றாம் தரப்பு காப்பீட்டுத் தொகை தலா ரூ.1.47 கோடியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதே போலப் பயணிகள் தனிப்பட்ட காப்பீடாக ரூ.10 முதல் ரூ.500 வரைப் பெறப்படுகிறது. இதனால் அந்த தொகைக்கு ஏற்றவாறு கூடுதல் காப்பீடு தொகை இறந்தவர்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது.

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய “ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர்” காப்பீட்டு தொகையாக ரூ.1000 கோடி வரை (CLAIM) காப்பீடு கோரிக்கை ஆகலாம் என எதிர்பார்க்கும் நிலையில், இத்தொகை நாட்டின் ஒட்டுமொத்த விமானங்களின் ஆண்டு காப்பீட்டுத் தொகையை அதிகமாகும்.

அதே இந்த விமான விபத்தைத் தொடர்ந்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான “நியு இந்தியா இன்சூரன்ஸ்” மற்றும் ஜி.ஐ.சி நிறுவனங்களின் பங்குகள் 4% மற்றும் 3% சதவீதம் குறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!