கோயம்புத்தூர், கேரளா ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..!
ஈரோடு அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 14-ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து காலை 8.50 மணிக்குப் புறப்படும் கோயம்புத்தூர் – லோக்மானியா திலக் ரயில் (எண்: 11014),
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் – டாடா நகா் ரயில் (எண்: 18190), ஆலப்புழையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை- தன்பாத் ரயில் (எண்: 13352),
எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- பெங்களூரு ரயில் (எண்: 12678) ஈரோட்டில் இருந்து வழக்கமான பாதையில் செல்லாமல் கரூா் வழியாக சேலத்துக்கு இயக்கப்படும். கரூரில் ரயில் நின்று செல்லும்.