திருச்சி – ஈரோடு ரயில் பகுதியாக ரத்து!
ஈரோடு – கரூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 12, 14, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி- பாலக்காடு ரயில் (எண்: 16843) கரூா் – பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் கரூரில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதேபோல், வருகிற ஜூன் 14-ஆம் தேதி பாலக்காடு – திருச்சி ரயில் (எண்:16844) போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது கோவை, வடகோவை, பீளமேடு ரயில் நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.