தூய்மை பணியாளர்களுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடிய கவுன்சிலர்..!
பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் விதமாகக் கோயம்புத்தூர் 86 – வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் என்பவர் தனது வார்டில் பணியாற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்குப் பிரியாணி மற்றும் உடைகளை வழங்கினார்.
கோயம்புத்தூர் புல்லுக்காடு பகுதியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 86 -வது வார்டு கவுன்சிலர் முகமது கபீர் என்பவர் பிரியாணி மற்றும் உடையை வழங்கி அவர்களுடன் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வார்டு கவுன்சிலர் அகமது கபீர் பிரியாணி மற்றும் வேட்டி, சட்டை, சேலை வழங்கினார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் தானும் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் மற்றும் ரம்ஜான் நாட்களில் தூய்மை பணியாளர்களுடன் கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்தார்.