கோயம்புத்தூர்செய்திகள்

12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலம்: ஏலம் விடுவதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி.

கோயம்புத்தூர் பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சி – பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து கடந்த 2012 -ல் சுமார் 90 பேர் பேரூர் பகுதியில் போடப்பட்டிருந்த சைட்டுகளை தலா ரூ.35 லட்சம் என்ற மதிப்பில் வாங்கியுள்ளனர். அனைத்து ஆவணங்களைச் சரி பார்த்து நிலத்தை வாங்கிய பொதுமக்கள் அதனைக் கடந்த 12 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த நிலம் வரும் 18 ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக நீதிமன்ற நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிலத்தை விற்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரான சோமசுந்தரம் என்பவரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது சோமசுந்தரம் நிலம் வாங்கிய பவானி சங்கர் என்பவருடன் இருந்த பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையால் தான் நோட்டீஸ் வந்துள்ளதாகவும், அதற்கு தடையாணை பெற்று விடலாம் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சோமசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட மக்கள் : கடந்த 2012 -ல் இடத்தை நாங்கள் வாங்கும் போது எந்த வில்லங்கமும் இல்லை எனக் கூறி விற்பனை செய்தார்கள், அதற்கான ஆவணங்களையும் வழங்கினார்கள். ஆனால் தற்போது திடீரென வந்துள்ள ஏலம் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எங்களது சேமிப்புகளை இதில் முதலீடு செய்துள்ளோம்.

எங்களிடம் நிலத்தை விற்ற நபருக்கு உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையும், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!