கோயம்புத்தூர்செய்திகள்

சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் சாலைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் இன்று (09.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் (09.06.2025) வடக்கு மண்டலம், வார்டு எண்.1-க்குட்பட்ட துடியலூர், ஸ்ரீகாந்த் நகர், சாரளா கார்டன், வளர்மதி நகர் உள்ளிட்ட 10 இடங்களுக்கு ரூ.129.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிகள் குறித்தும் மற்றும் வார்டு எண்.10-க்குட்பட்ட சரவணம்பட்டி, போஸ் கார்டன் பகுதியில் புதிதாகத் தார்ச் சாலை அமையவுள்ள இடத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று. ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, வடக்கு மண்டலத்தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார். மாமன்ற உறுப்பினர் கற்பகம். உதவி பொறியாளர்கள் ஜெயின்ராஜ், சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!