கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்கள் சிறிது நிதானமாகவும் செயல்பட வேண்டும் – ஷாரூக்
ஐ.பி.எல் வெற்றி கொண்டாட்டத்தில் பெங்களூர் சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகப் பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் ஷாரூக் வேதனை.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல் 20 ஓவர்கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது ஒன்பதாவது சீசனாக டி.என்.பி.எல் போட்டியில்,லைகா கோவை கிங்ஸ் , சேப்பாக்கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற போட்டிகள் வேறு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லைகா கோவை கிங்ஸ் அணியினர் கலந்து கொண்டனர். ரசிகர்களுடன் செல்பி , கலாட்டா போட்டிகள் என கலந்து கொண்ட லைகாகிங்ஸ் அணியினர் மேடையில் ரேம்ப்வாக் நடந்து அசத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய,ஐ.பி.எல் குஜராத் டைட்டன் அணியின் வீர்ரும், லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனும், ஆன ஷாரூக் பேசுகையில், தற்போது நடைபெற்று வரும் டி.என்.பி.எல். சீசனில் இனி வரும் போட்டிகளில் சிறந்து செயல்பட உள்ளதாக கூறினார். மேலும் அறிமுக வீரர்களை அதிகமாகக் கொண்ட அணியாக விளையாடுவதில் அதிக பலமே தவிர எந்த சிரமும் இல்லை எனத் தெரிவித்தார்.
ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட துயர சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறிய அவர், கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்கள் சிறிது நிதானத்தையும் கடைப் பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்..
மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி மேலும் தொடராமல் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது லைகா கோவை கிங்ஸ் அணியின் நிர்வாகிகள்,மற்றும் பயிற்சியாளர்கள் ஹாரிவகீசன், ஹரீஷ், ஹரி மனோகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.