கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் 3.15 கிலோ கஞ்சா விதைகள் பறிமுதல்.

பாங்காக்கில் இருந்து கோவை வந்த விமானத்தில் கஞ்சா விதைகளைக் கடத்தி வந்த பெண்ணை வான்வழி நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோவை வரும் விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக ஒன்றிய வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அதிகாரிகள் சிங்கப்பூரிலிருந்து வந்த விமான பயணிகளைக் கண்காணித்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக வந்த பெண் ஒருவரை அதிகாரிகள் அழைத்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர்.

 இதனால் சந்தேகமடைந்த போலீஸார் பெண்ணின் உடைமைகளை சோதனையிட்ட போது அதில் சுமார் 3.15 கிலோ கஞ்சா விதைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!