நுண் கடன் பெற்று தொழிலதிபராகிய பெண்கள் – ரெப்கோ நிறுவனர்.
ரெப்கோ வங்கியில் நுண்கடன் பெற்ற பெண்களில் 5 சதவீதம் பேர் தற்போது தொழிலதிபர்களாக மாறியுள்ளனர் என ரெப்கோ வங்கி நிறுவனர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் ரெப்கோ நுண் கடன் வங்கியின் 3-வது மண்டல அலுவலகத்தை ரெப்கோ தலைவர் சந்தானம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2010ல் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ரெப்கோ நுண்கடன் வங்கி துவங்கப்பட்டது. தற்போது ஆண்டுக்கு ரூ.1,400 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது ரூ.2,000 கோடி இலக்காக நிர்ணயம் செய்துள்ளோம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் மகளிர் மொத்தம் ரூ.2,000 கோடி அளவிற்கு நுண்கடன் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 3 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதனை 5 லட்சம் உறுப்பினர்களாகக் கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருகிறது.
மேலும் இவ்வங்கி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என ஐந்து மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 12 லட்சம் மகளிர் வங்கி மூலம் பயனடைந்துள்ளனர்.
2030 -க்குள் 25 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக வேண்டும் என்பதை நிர்ணயதுள்ளோம். அதேபோல் ரெப்கோ வங்கி மூலம் நுண்கடன் பெற்ற 5% மகளிர் தற்போது தொல்லை அதிபர்களாக உருவெடுத்துள்ளனர்.
அவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வங்கிக் கடன்களைப் பெருமளவிற்கு உயர்ந்துள்ளனர். அவர்களுக்கான கடன்களை வழங்கவும் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்