கோயம்புத்தூர்செய்திகள்

பராமரிப்புப் பணிக்காக கோயம்புத்தூர் – நாகர்கோவில் ரயில் ரத்து!

ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோயம்புத்தூர் – நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சோழவந்தான் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் – நாகா்கோவில் தினசரி ரயில் (எண்: 16322) இன்று (ஜூன் 4) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் – திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.

திண்டுக்கல் – நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!