தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டில் அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு இணைய சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டு கடந்த பிப். 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே ஏராளமானோா் இந்த இணைய வழி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இணைய வழி விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதாா் எண்ணை இணைத்ததுடன், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்து தமிழ்நாடூ அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து விளையாட்டு நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அப்போது, ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சாா்பில் எழுத்துபூா்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்படடது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்குகளின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயப்படுத்தி நேரக்கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும் என நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் அரசின் விதிகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!