கோயம்புத்தூர்செய்திகள்

புதிதாகப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாநகராட்சி ஆசிரியர்கள்…!

கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், புதிதாகப் பள்ளியில் சேர்ந்த சுமார் 150 மாணவர்களை, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

கோடைக்கால விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், புதிதாகப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, மாணவ மாணவிகளின் அணி வகுப்போடு புதிதாகப் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களைக் கொடுத்தும் வரவேற்றனர். புதிதாகச் சேர்க்கப்பட்ட 158 மாணவர்களுடன் சேர்த்து மொத்தம் 721 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!